search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி பேரணி"

    டெல்லி கவர்னர் அலுவகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் வீடு நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினர். #AAPmarch #PMresidence
    புதுடெல்லி: 

    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 டெல்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

    இதற்கிடையில், இவ்விவகாரத்தில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரது இல்லம் நோக்கி இன்று பேரணியாக புறப்பட்டு செல்வோம் என ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா நேற்று அழைப்பு விடுத்திருந்தார். 



    இந்நிலையில், தலைநக்ர் டெல்லியில் இன்று மாலை ஆம் ஆத்மி மந்திரிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வீட்டுக்கு பிரமாண்ட பேரணியாக சென்றனர். 

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ஆம் ஆத்மி பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை. பேரணியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

    ஆம் ஆத்மி பேரணி நடைபெறுவதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க், பட்டேல் சவுக், மத்திய தலைமை செயலகம், உத்யோக் பவன் மற்றும் ஜன்பத் ஆகிய ரெயில் நிலையங்களின் இரு வாயில்களும் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #AAPmarch #PMresidence
    டெல்லி கவர்னர் அலுவகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கை தொடர்பாக பேரணிக்கு அழைப்பு விடுத்ததால் டெல்லியில் 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. #5metrostationsshut #AAPmarch #PMresidence
    புதுடெல்லி:

    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 டெல்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில், இவ்விவகாரத்தில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரது இல்லம் நோக்கி இன்று மாலை 4 மணியளவில் பேரணியாக புறப்பட்டு செல்வோம் என ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

    டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்ட மந்திரிகள், ஆம் ஆத்மி பிரமுகர்கள், தொண்டர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிப்பு வெளியானது. அனுமதி இல்லாமல் இந்த பேரணி நடைபெறவுள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் மாதுர் வர்மா குறிப்பிட்டார்.

    இந்த பேரணிக்கு போலீஸ் அனுமதி பெறப்படாத நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

    போலீசாரின் அறிவுரைப்படி பகல் 12 மணியளவில் டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரெயில் நிலையத்தின் இரு வாயில்களும் அடைக்கப்பட்டன.

    இதேபோல், பிற்பகல் சுமார் 2 மணியளவில் பட்டேல் சவுக், மத்திய தலைமை செயலகம், உத்யோக் பவன் மற்றும் ஜன்பத் ஆகிய ரெயில் நிலையங்களின் இரு வாயில்களும் அடைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் மண்டி ஹவுஸ் பகுதியில் இருந்து பேரணி புறப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. #5metrostationsshut #AAPmarch #PMresidence
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிட வலியுறுத்தி கவனர் மாளிகையை நோக்கி ஆம் ஆத்மியினர் பேரணியில் ஈடுபட்டு வருவதால் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். #kejriwal #pmmodi #delhigovernor

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

    இந்த நிலையில் துணை நிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தர விடுமாறும், ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

    பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இன்று 4-வது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிட வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    பா.ஜனதாவில் இருந்து சமீபத்தில் விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா, ஆம் ஆத்மி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    ஆம் ஆத்மியின் இந்த போராட்டத்துக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சுஜித்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம், லல்லுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகியவை ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இதற்கிடையே இந்த வி‌ஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்டிரைக்கை முடித்து வைக்க கவர்னர் ஒத்துழைக்க மறுத்து வருகிறார் என்று குற்றம் சாட்டியும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். #kejriwal #pmmodi #delhigovernor

    ×